உலக செய்திகள்

நேபாளத்தில் காணாமல் போன விமானம் கண்டெடுப்பு

நேபாளத்தில் நேற்று காணாமல் போன தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரட்டை எஞ்சின் விமானம் சிதைந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தில் மொத்தம் 22 பேர் பயணித்துள்ளதுடன், இதுவரை 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று நேபாள ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் உள்ள மஸ்டாங் மாவட்டத்தில் சுமார் 14500 அடி உயர இமயமலைப் பகுதியில் இந்த விமானம் நேற்று விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திற்கு மீட்பு ஹெலிகாப்டர்கள் சென்று அடைந்துள்ளதாகவும் அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.

Related posts

பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் WHO இனது அறிவிப்பு

wpengine

ஆப்கானிஸ்தானில் நடந்த முடிந்த போர் முடிவுகளுக்கு பாகிஸ்தானை குற்றம் சொல்லாதீர்கள்

wpengine

டோரியன் சூறாவளியால் இதுவரை 05 பேர் உயிரிழப்பு

wpengine