உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விளையாட்டு

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியின் போது, அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதான நால்வரில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மேற்படி நான்கு மாணவர்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

எதிர்வரும் திங்கள் முதல் தபால் திணைக்கள தொழிற்சங்கம் பாரிய வேலை நிறுத்தத்தில்..

wpengine

தனஞ்சய செய்த தவறினை ஏற்றுக்கொண்டு மேத்யூஸ் கருத்து…

wpengine

சஜினுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு

wpengine