உள்நாட்டு செய்திகள்

மீண்டும் விலை குறைக்கப்படவுள்ள லிட்ரோ எரிவாயு! வெளியான புதிய அறிவிப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விடயத்தை இன்றைய தினம் (29) லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை மற்றுமொரு எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

இறக்கும் பணி

இந்த நிலையில் 3,700 மெற்றிக் தொன் எரிவாயு இறக்கும் பணி நாளைய தினம் (30.10.2022) ஆரம்பமாகும். இதேவேளை உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் தற்போது குறைவு ஏற்பட்டுள்ளது.

இதன் பயனை மக்களுக்கு வழங்கும் நோக்கில் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஹேமசிறி மற்றும் பூஜித் இற்கு பிணை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீள் பரிசீலனை மனு..

wpengine

இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் ராஜினாமா..!

wpengine

ஜனாதிபதித் தேர்தல் – 2540 முறைப்பாடுகள் பதிவு

wpengine