உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவிக்கு ஆசிரியர் அனுப்பிய வட்ஸ்அப் செய்தி..!

பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவிக்கு நடன ஆசிரியர் ஒருவர் வட்ஸ்அப் செய்திகளை தொடர்ந்து அனுப்பிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நடன ஆசிரியர் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது.

மாணவியை தவறு செய்ய தூண்டும் நோக்கில் ஆசிரியர் தொடர்ச்சியாக வட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாக சந்தேகிக்கப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆசிரியை அனுப்பிய செய்திகளின் ஸ்கிரீன் ஷொட்களை மாணவி தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிந்த நபர் ஒருவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த மாணவியின் தாய் கருத்து தெரிவிக்கையில் பாடசாலை அதிபர் தனது மகளை அலுவலகத்திற்கு வரவழைத்து பலர் முன்னிலையில் பல்வேறு கேள்விகளை கேட்டதாகவும் இதனால் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

Related posts

ரவி’க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று பாராளுமன்றில் தீர்மானம்..

wpengine

இன்று(20) முன்னெடுக்க இருந்த ரயில் வேலைநிறுத்தப் போரட்டம் கைவிடப்பட்டது..

wpengine

கடந்த வருடத்தில் 321 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்

Azeem Kilabdeen