உள்நாட்டு செய்திகள்

கிழக்கு ஆளுநர் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 16ஆம் திகதி பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்ட ஆளுநர்இ இன்று -19- திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ச. வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபையின் அரச திணைக்களங்களது செயலாளர்கள், அரச திணைக்கள உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தானின் 78வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு விஜயம்…

wpengine

நான் 150 ஆண்டுகள் உயிருடன் இருப்பேன், என்னை முதலமைச்சராக்கினால் அந்த வித்தையை சொல்லுவேன்..!

wpengine

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம் பாராளுமன்றத்தில்

wpengine