Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முத்துராஜா யானை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட மாட்டாது..!

முத்துராஜா அல்லது ‘சக்சூரின்’ எனப்படும் யானை தாய் மன்னரின் காவலில் இருப்பதால், முத்துராஜா யானை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யானையை மீண்டும் தருமாறு இந்நாட்டு மதத்தலைவர் ஒருவர் விடுத்திருந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அந்நாட்டு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து அரசின் நன்கொடையாக, கடந்த 22 ஆண்டுகளாக இலங்கையில் இருந்த முத்துராஜா யானையை தாய்லாந்துக்கு மீண்டும் கொண்டு செல்ல அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.

அழைத்துச் செல்லப்பட்ட முத்துராஜா யானை லம்பன் மாநிலத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

முத்துராஜா சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

கடந்த 4 நாட்களில் 140 மில்லியன் வருமானம்

wpengine

3 வருடங்களுக்கு பின்னர் யானையின் மே தினம்

wpengine

கடற்படை : குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 748

wpengine