உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெற்றிடமாக உள்ள சுமார் 4000 கிராம சேவை உத்தியோகத்தர் விரைவில் நியமனம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெற்றிடமாக உள்ள சுமார் 4000 கிராம சேவை உத்தியோகத்தர் பதவிகளை துரிதமாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று (07) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் உள்ள அனைத்து 14,022 கிராமப்புற சேவை களங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் e-GN திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது, மேலும் நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் பல காரணிகளின் அடிப்படையில் பொது சேவையில் சமநிலை இருப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். தரவரிசை பார்க்காமல் செய்ய வேண்டும்.

 

Related posts

அரச ஊழியர்களின் அடிப்படைச்சம்பளம் உயர்த்தப்படும் – பிரதமர்

wpengine

அதிக விலையில் உர மூடைகளை விற்போருக்கு எதிராக நடவடிக்கை…

wpengine

மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும்

wpengine