Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தருஷியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய ஜனாதிபதி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி இன்று (05) காலை மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது திறமைக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

சர்வதேச மட்டத்தில் இலங்கைக்காக அவர் பெற்றுக்கொடுத்த தனித்துவமான வெற்றியினால் நாடு மிகவும் பெருமையடைவதாக தெரிவித்த ஜனாதிபதி, அவரது எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகளுக்கு தனது ஆசீர்வாதத்தையும் தெரிவித்தார்.

மேலும், மாணவி தருஷி கருணாரத்ன நாட்டிற்கு வந்ததன் பின்னர் அவரைச் சந்திக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Related posts

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடும் விடயத்தில் பலத்த பாதுகாப்பு…

wpengine

15ஆம் திகதி ஆசிரியர் – அதிபர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

wpengine

நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக 05 வழக்குகள் விசாரணைக்கு..

wpengine