Top Story 1

முன்னாள் ஜனாதிபதி ரணில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, நேற்று (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்தனர்.

Related posts

மேலும் 17 பேர் குணமடைந்தனர்

wpengine

NTM சேவைகள் மீண்டும் ஆரம்பம்

wpengine

ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்புடைய பயங்கரவாதிகளை தூக்கிலிடுங்கள், நிரபராதிகளை விடுவியுங்கள் – ரிஸ்வி முப்தி..!

wpengine