உள்நாட்டு செய்திகள்

மத்தள விமான நிலையம் மீள் ஆரம்பிக்கப்படும் அறிகுறியில்

தற்போதைய பெரும்போகத்தில் பெறப்படும் நெல்லை மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்துவதை தவிர்ப்பது தொடர்பில் கிராமிய பொருளாதார அமைச்சு தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாக அரசாங்க களஞ்சியசாலைகள் மட்டுமின்றி பல தனியார் களஞ்சியசாலைகளும் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கால்நடை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த பெரும்போகத்தின் போது அரசாங்கத்தால் பெறப்பட்ட நெற்தொகையின் 5000 மெட்றிக் தொன் நெல்லானது தற்போது மத்தள விமான நிலைய களஞ்சியசாலையில் களஞசியப்படுத்தப்பட்டுள்ளது. அவை எதிர்வரும் வாரங்களில் அகற்றப்பட்டு, விமானநிலையத்தின் பாவனைக்கு பொறுப்பானவர்களிடம் கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ராஜித உட்பட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

wpengine

டீசலை 52 ரூபாவினாலும் பெற்றோலை 19 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும்! – உதய கம்மன்பில

wpengine

காலி Indian Hut உணவக முகாமையாளர் உட்பட 11 பேர் கைது!

Azeem Kilabdeen