உள்நாட்டு செய்திகள்

ஹோமாகம நீதிமன்றத்தில் குழப்பம் விளைவித்தமை தொடர்பில் பிக்குமார் மூன்று பேர் கைது

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்குள் நுழைந்து குழப்பம் விளைவித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவிலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், நீதிமன்றத்திற்குள் வந்து, நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில வைக்கப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவு வழங்கப்பட்ட கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்திற்கு எதிரிலும் உள்ளேயும் நுழைந்த பிக்குமார் உள்ளிட்ட சிலர் அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு ஹோமாகம நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இதனடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கொழும்பில் பூனை மலத்துடன் வழங்கப்படும் உணவு

wpengine

சம்பா, நாடு நெல் மற்றும் கீரி சம்பா ஆகியவற்றிற்கு நிர்ணய விலை…

wpengine

விளை­யாட்டுத் துறையில் மாற்றம் வேண்டும் இல்லையேல் வீழ்ச்சிப்பாதையில் பயணிக்கும் – அர்ஜுன

wpengine