உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கைதாகிய சிசில் கொத்தலாவல வைத்தியசாலையில் அனுமதிப்பு

லலித் கொத்தலாவலவின் மனைவி சிசில் கொத்தலாவல வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்பிய போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

குடி வரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இவர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கோல்டன் கீ நிறுவன மோசடி தொடர்பில் அவரை கைது செய்வதற்கு உயர் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட சிசில் கொத்தலாவல உடல் நிலை மோசம் காரணமாக காவற்துறையின் பாதுகாப்புடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஜாலிய கடமைகளை பொறுப்பேற்றார்

wpengine

தேர்தல் கடமைகளிலிருந்து விலகியிருக்கும் அரச அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம்…

wpengine

இழப்பீட்டு அலுவலக மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கான சட்டமூல வர்த்தமானி வெளியீடு…

wpengine