உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யோஷித விவகாரம் – மஹிந்த மேல் நீதிமன்றத்திற்கு வருகை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் மேல் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.

மஹிந்தவின் புதல்வரான யோசித்தவிற்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்காக இன்று மஹிந்த மேல்நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த மாதம் 25ஆம் திகதி கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட யோசித்தவை மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது

Azeem Kilabdeen

இன்று முதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்…

wpengine

உயர்தர பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

wpengine