உள்நாட்டு செய்திகள்

BBS இற்கு எதிரான இரு வழக்குகளும் செப்டம்பர் வரை ஒத்திவைப்பு

பொதுபல சேனாவுக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு வழக்குகளும் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 15ஆம்  திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது, புனித குர்ஆனை அவமதித்தமை மற்றும் ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த விடாமல் தடையாக இருந்தமை போன்ற இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கே, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நேற்று வியாழக்கிழமை (14) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்குகள்  தொடர்புடைய விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அது தொடர்புடைய முடிவு, சட்டமா அதிபரின் கருத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய வழக்கு விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் முதலாவது வழக்கில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மாத்திரமே சந்தேகநபராக கருதப்படுவதாகவும் மற்றைய வழக்கில், அவருடன் இன்னும் சில தேரர்கள் சந்தேகநபர்களாக கருதப்படுவதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

நன்றி  – ஷெஹான் சாமிக்க சில்வா

Related posts

அரசியலமைப்பு மறுசீரமைப்பின் பணிகளுக்காக ஶ்ரீ.சு.கட்சியிடமிருந்து புதிய குழு

wpengine

இன்று 18 மணிநேர நீர் விநியோக தடை…

wpengine

“பெண்களின் அரசியல் பிரவேசம் எதிர்கால அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது” நிந்தவூரில் டாக்டர்.ஹஸ்மியா தெரிவிப்பு!

wpengine