உள்நாட்டு செய்திகள்

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 2017 ஆம் ஆண்டு இறுதியில்..

எதிர்வரும் அடுத்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 2017 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறும் என  நாடாளுமன்றின் சபை முதல்வரும், உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தாது தொடர்ந்தும் ஒத்திவைத்து வருவதால் அரசின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அமைச்சர் கிரியெல்ல  கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரிஷாட் பதியுதீனின் மனுக்கள் 15 இல் பரிசீலனைக்கு

wpengine

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 24ம் திகதி பேரூந்து பணிப்புறக்கணிப்பு…

wpengine

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

wpengine