உள்நாட்டு செய்திகள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பதவி இராஜினாமா..

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்ரீ ஹெட்டிகே, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

நீண்ட நாட்களுக்கு வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டியிருப்பதன் காரணத்தால், அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக மேலும் தெரியவருகிறது.

தன்னுடைய இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு பேரவைக்கு அவர் அனுப்பிவைத்துள்ளதாகவும், தலைவர் பதவியை இராஜினாமா செய்தாலும், ஆணைக்குழுவின் உறுப்பினராக தான் தொடர்ந்து செயற்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ள இலங்கை..!

wpengine

ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை…

wpengine

நீர்ப்பாசன, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட அரச அதிபர்களின் பங்கேற்புடன் உயர்மட்டக் கூட்டம்! – முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு!

wpengine