உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றில் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையின் கீழ் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (22) முற்பகல் 11 மணிக்கு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

நாளைய தினம் கூடவுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே சபாநாயகர் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அரசாங்கத் தரப்பு செய்திகள் குறிப்பிடுகின்றன.

இங்கு 20ம் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றில் முன்வைப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தவுள்ளதாக பொதுசன ஐக்கிய முன்னணி தலைவர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டார்.

Related posts

தொடரும் இந்திய – பாகிஸ்தான் முறுகல்

wpengine

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது செய்மதி ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு…

wpengine

மாகாண எல்லைகளுக்கு அருகே விசேட சோதனை

wpengine

7 comments

shamil Jun 22, 2015 at 10:37 am

நாளை பாராளுமன்றம் கலைபது பற்றிய கூட்டமாக இருக்கலாம்

nusrath Jun 22, 2015 at 10:38 am

சில வேலை இன்று கலைப்பட்டளும் கலைகப்படும்

saba Jun 22, 2015 at 10:39 am

நாட்டு மக்களுக்கு நன்மை கிடைத்தால் சரி

suba Jun 22, 2015 at 10:41 am

இம் முறையும் நியாமான தேர்தல் நடக்கம் என மக்கள் நம்பிக்கை தெரிவிக்கிரார்க்ள்

july Jun 22, 2015 at 10:43 am

இம் முறை அலரிமாளிகையில் தேர்தல் தினம் இரவு விஷேட கூட்டன்ங்கள் நடை பெறாது

gurunathan Jun 22, 2015 at 10:45 am

பழைய விடயங்களை அப்போ தோண்டிரீங்க

tha Jun 22, 2015 at 10:49 am

அது தான் நாட்டு மகளுக்கு தெரிநத விடயங்கள் தானே

Comments are closed.