உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 2 இராணுவ வீரர்கள் கைது…

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 2 இராணுவ வீரர்கள் இன்று(19) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இராணுவ மேஜர் ஒருவர் உட்பட 3 இராணுவத்தினரே குற்ற விசாரணைப் பிரவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலார் கீத் நொயர் மீது கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளைய தினம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும்

News Editor

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு…

wpengine

இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களுடன் சுருண்டது…

wpengine