உள்நாட்டு செய்திகள்

மாணவர்களுக்கு 13 ஆண்டுகள் கட்டாயக் கல்வி – புதிய சட்டமொன்று அமுலுக்கு…

பாடசாலைகளில் மாணவர்கள் 13 ஆண்டுகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டிய வகையில் புதிய சட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் அனைத்து மாணவர்களும் தரம் 13 வரையில் கல்வி பயிலக்கூடிய வகையில் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படும் என ராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

தரம் 8 அல்லது சாதாரண தரத்துடன் அதிகளவான மாணவ மாணவியர் பாடசாலைகளை விட்டு இடை விலகிச் செல்வதாகவும் இவ்வாறானவர்கள் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றுவதாகவும் தெரிவித்த அவர் தொழில்சார் தகுதிகளை உடையவர்கள் சிறந்த ஊதியம் ஈட்டக்கூடிய சாத்தியம் உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

ஊடகவியலாளர்களுக்கு இலவச அலைபேசி

wpengine

சீரற்ற காலநிலையினால் 70 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

wpengine

மஹிந்தானந்த தனிமைப்படுத்தலில்

wpengine