உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தொலைந்து போன மாலிங்கவின் சகோதரர் இந்தியாவில்…? – ஜெயவர்த்தன ட்விட்டரில் வெளியாக்கினார்..

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க போலவே இருக்கும் ஒரு நபரின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி ஜெயவர்தனே கலகலப்பூட்டியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் அணியும் மோதின.

இந்த போட்டி குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நடைபெற்றது.

போட்டி முடிந்த பின்னர் மும்பை வீரர் லசித் மாலிங்கா போன்று அச்சு அசல் உருவம் கொண்ட ஒரு நபர் மாலிங்காவை சந்தித்து செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார்.

இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள மும்பை அணியின் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே, வெகு நாட்களுக்கு முன்னர் தொலைந்து போன தனது சகோதரரை மாலிங்கா கண்டுபிடித்து விட்டார் என கிண்டலாக கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது…

(rizmira)

Related posts

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி விவரம்…

wpengine

ஆளுநர்களின் சட்டவிரோத நியமனங்களை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கபே வலியுறுத்தல்..!

wpengine

களனிவெளி ரயில் சேவைகள் பாதிப்பு

wpengine