வாழ்க்கை

இன்றைய நவீன கால சூழலில் கருத்தரிக்க ஏற்ற வயது எது தெரியுமா..?

இன்றைய நவீன கால சூழலில் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
படித்து முடித்து, ஒரு பணியில் அமர்ந்து அப்பணியில் ஒரு நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் என்று எண்ணுவதால் 35 வயதுக்குப் பிறகு திருமணம் புரியும் பெண்கள் ஏராளம்.

30 வயதைத் தாண்டி திருமணம் செய்யும் போது கருமுட்டை உருவாகத் தாமதம், கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம், எடை குறைவான குழந்தை என்பது போன்ற பிரச்சினைகள் வரலாம்.

இது போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். திருமணத்துக்கு முன்பும், கருத்தரிப்பதற்கு முன்பும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானதாகும்.

மருத்துவரின் வழிகாட்டுதலோடு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கருமுட்டையை முன்பே எடுத்து ஃப்ரீஸ் செய்து வைப்பதன் மூலம் எந்த வயதிலும் குழந்தை பெறலாம்.

ஆனால் அது சோதனைக் குழாய் மூலம் தான் சாத்தியப்படும். இதில் 100% உத்தரவாதம் அளிக்க முடியாது. குறிப்பிட்ட வயதுக்குள் தாய்மை அடைவது மட்டுமே சரியானது.

23 வயதிலிருந்து 28 வயது வரை தாய்மை அடைவதற்கான சரியான வயது. மீறிப்போனால் 30 வயது வரை கூட இருக்கலாம். கூடுமான வரைக்கும் 30 வயதுக்குள் தாய்மை அடைந்து விட வேண்டும் என்பது மருத்துவர்களது ஆலோசனை.

(rizmira)

Related posts

காலை உணவை தவிர்த்தால் ஏற்படும் ஆபத்து…

wpengine

அத்திப்பழ அழகு குறிப்புகள் பற்றி தெரியுமா?

wpengine

முகப் பொலிவுக்கு பாலை இப்படி பயன்படுத்துங்கள்…

wpengine