உள்நாட்டு செய்திகள்

முகமாலையில் பதற்ற நிலை – ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் இராணுவம் குவிப்பு.

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, பளை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் பதற்ற நிலை நிலவியுள்ளது.

பளை, கச்சார்வெளி சந்திப்பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் போக்குவரத்து பொலிஸாரின் வாகனத்தின் மீது இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கு நேற்று மே 18ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

16 பேர் கொண்ட குழு இன்று முன்னால் ஜனாதிபதியுடன் சந்திப்பு…

wpengine

மரண தண்டனையினை நிறைவேற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை

wpengine

இரத்த தானம் செய்யுமாறு பொது மக்களிடம் இரத்த வங்கி கோரிக்கை..

wpengine