உள்நாட்டு செய்திகள்

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை..

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மண்சரிவு மற்றும் வெள்ள நிலைமைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

குறிப்பாக, தேசிய கட்டட ஆய்வு மையம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ள பகுதிகளிலுள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட, அயகம, கிரிஉல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், காலி மாவட்டத்தின் நாகொடை பிரதேச செயலாளர் பிரிவிலும் களுத்துறை மாவட்டத்தின் பாலின்தனுவர, வலல்லாவிட மற்றும் அகலவத்தை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

நாமல் ராஜபக்ஷ உயர் நீதிமன்ற முன்னிலையில்…

wpengine

மஹரகம நகர சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்…

wpengine

தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கும் காலம் நீடிப்பு

wpengine