விளையாட்டு

‘இளஞ் சிவப்பு’ நிறப் பந்தில் திமுத் சதம் விளாசி சாதனை..

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(07) அபுதாபியில் இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த போட்டியில் ‘இளஞ் சிவப்பு’ நிறப் பந்து பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் தடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, நேற்றைய(06) முதலாம் நாள் ஆட்டநேர நிறைவில், 3 விக்கட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கை அணி சார்பில், திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 49 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

 

(rizmira)

Related posts

மேத்யூஸ் இற்கு விசேட பரிசோதனை – குருசிங்க’விடமிருந்து விசேட அறிவித்தல்..

wpengine

ஷம்சி’வை பின்தள்ளி வனிந்து ஹசரங்கவுக்கு முதலிடம்

wpengine

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீளவும் ரங்கன ஹேரத் முன்னிலையில்..

wpengine