உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் விளையாட்டு அரங்கினுள் பெண்கள் நுழைய அனுமதி…

2018ஆம் ஆண்டு முதல், முதல்முறையாக, விளையாட்டு அரங்குகளில் பெண்கள் பார்வையாளர்களாக அமர, சவுதி அரேபியா அரசு அனுமதித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபிய அரசு நவீன பொருளாதார திட்டத்தை அமல்படுத்தியுள்ளதுடன் அதற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என கருதுகிறது. அதன்படி பெண்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்குள் பெண்கள் நுழைய அனுமதிப்பட இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ரியாத், தமாம் , ஜித்தா ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களுக்குள் அடுத்த ஆண்டு முதல் பெண்கள் நுழைய அனுமதிக்கப்பட இருப்பதாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related posts

இந்தோனேஷியாவின் தலைநகர் நீரில் மூழ்கும் அபாயம்

wpengine

எமது தாக்குதல் மிக மோசமான மற்றும் வேகமாக இருக்கும் – ட்ரம்ப்

wpengine

ரஷ்யாவின் கொடூரத்தாக்குதலில் சிரிய பொதுமக்கள் 200பேர் பலி

wpengine