உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

மில்லியன் கணக்கான உயிர்களை காக்கத் தவறியது ஐ.நா – மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நிலைமைகள் தொடர்பாக ஐ.நா பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காணொளி மூலம் கருத்து வெளியிட்ட போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யப் போகிறது என்றால் ஐ.நாவின் நோக்கங்கள் உறுதியானதாகவும், தெளிவானதாகவும், பிளவுகளற்றதாகவும் இருக்க வேண்டும்.

மேலும், 2009இல் இலங்கையிலும், இப்போது சிரியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சூடான், புரூண்டி, மியான்மாரிலும் கூட, இவ்வாறிருந்திருந்தால், மில்லியன் கணக்கான மக்களின் மகத்தான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(riz)

 

Related posts

கண்டி கலவரங்களில் சேதமடைந்த வணக்கஸ்தலங்களைப் புனரமைக்கும் பணி இன்று ஆரம்பம்…

wpengine

பிலிப்பைன்ஸில் இன்று 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம்

News Editor