உள்நாட்டு செய்திகள்

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ 05மாத காலத்திற்கு நாட்டிலிருந்து வெளியேறினார்…

பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரிகேடியர் பயிற்சி ஒன்றுக்காக 05மாத காலத்திற்கு, சீனா சென்றுள்ளதாக நம்பிக்கையான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் 70’வது சுதந்திர தினத்தன்று, இலண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ அண்மையில் இலங்கைக்கு அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Rishma

Related posts

பெற்றோல் விநியோகம் இன்று முதல் வழமைக்கு…

wpengine

கூட்டமைப்பிற்கு இன்னும் இரு போனஸ் ஆசனங்கள்

wpengine

கனிய வள அகழ்வு அனுமதிப்பத்திர காலாவதி திகதி நீடிப்பு

wpengine