உள்நாட்டு செய்திகள்

பொருளாதாரக் குழு இன்னமும் இரத்து செய்யப்படவில்லை…

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் குழு இன்னமும் இரத்து செய்யப்படவில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“… பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார முகாமைத்துவ குழு இன்னும் இரத்தாகவில்லை. இந்த பொருளாதார முகாமைத்துவ குழு இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காரணத்தினால் இந்த விடயம் பற்றி எனக்கு தெரியும். இந்த பொருளாதாரக் குழுவினை இரத்து செய்வது குறித்த அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது..”

 

Rishma

Related posts

எவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாவுக்கு விடுதலை

wpengine

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை கல்விசார் ஊழியர்களின் கீழ் நியமிக்கவேண்டும் – எம்.எஸ் தௌபீக் எம்.பி கோரிக்கை..!

wpengine

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிச்சயம் தோல்வியடையும் – கூட்டு எதிர்க்கட்சி..

wpengine