உள்நாட்டு செய்திகள்வணிகம்

தேயிலை நிலங்களை பதிவு செய்யும் இறுதி அறிக்கை தயார் நிலையில்…

தேயிலை நிலங்களை பதிவு செய்வது சம்பந்தமான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

அதன் தகவல்களை அடிப்படையாக கொண்டு கிராம மட்டத்தில் தேயிலை நிலங்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தேயிலை ஆணையாளர் ஜயந்த எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டை ´பயிரிடும் ஆண்டு´ என பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்காக வெற்று நிலங்கள் தொடர்பான தகவல்கள் மிகவும் முக்கியமானது என அவர் கூறியுள்ளார்.

தேயிலை கொழுந்து அறுவடையை மேம்படுத்தல், தேயிலை நில உரிமையாளர்களுக்கு வணிகக் கடன் பெற்றுக்கௌ்ள வசதி ஏற்படுத்தல், தேயிலை நில உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி அரச துறையால் நலத்திடங்களை வழங்குதல் இந்த ​வேலைத்திட்டத்தின் நோக்கம் என தேயிலை ஆணையாளர் ஜயந்த எதிரிசிங்க தெரிவித்தார்.

Related posts

இவ்வருடத்தில் ரயில் விபத்துக்களில் 35 பேர் உயிரிழப்பு…

wpengine

கொழும்பு மாநகர சபையின் ஆணையாளராக வீ.கே.ஏ அநுர நியமனம்…

wpengine

லக்சிரி செவன வீடமைப்புத்திட்டம் இன்று(12) பொதுமக்களிடம் கையளிப்பு…

wpengine