உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை களுத்துறை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடியமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் புற்றுநோய் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள சுவீடன் மருத்துவ குழு உதவி..

wpengine

மேலும் பலர் நாடு திரும்பினர்

wpengine

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

wpengine