உள்நாட்டு செய்திகள்

அரச நிறுவனங்களில் உள்ள மேலதிக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தடை…

திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான அங்கீகாரம் இன்றி அரச நிறுவனங்களுக்கான பணிக் குழுவினரை இணைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமாக வேறு ஊழியர்களை சேவையில் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு சம்பளம் வழங்கவே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிரூபத்தை நேற்று(31) நிதி அமைச்சு வெளியிட்டிருந்தது.

இதற்கு மாற்றமாக ஆட்சேர்ப்புக்களை மேற்கொண்ட உரிய நிறுவனத்தின் தலைவர், மாகாண பிரதம செயலாளர், நிதிப் பிரிவின் தலைவர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் குறித்த சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

R.Rishma

Related posts

நாடளாவிய ரீதியில் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை..

wpengine

நாட்டில் நிலவும் வரட்சிக் காலநிலை குறித்து பொதுமக்களுக்கு அரசு முக்கிய வேண்டுகோள்..

wpengine

பேலியகொடை பகுதியில் தீ விபத்து…

wpengine