உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் வருட நிறைவை முன்னிட்டு நாளை முதல் சமய நிகழ்வுகள்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 67 ஆவது வருட நிறைவை முன்னிட்டு நாளை(02) முதல் பல்வேறு சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

முதலாவது சமய நிகழ்வு களனி ரஜமகா விகாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (02) மாலையும், இந்து மத சமய நிகழ்வுகள் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் ராமணாதன் தலைமையில் பம்பலப்பிட்டி திரேஷன் கோவிலில் நடைபெறவுள்ளது.

இஸ்லாமிய சமய பிரார்த்தனை நிகழ்வுகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் மாளிகாவத்தை பள்ளிவாயலிலும், மற்றது இராஜாங்க அமைச்சர் பௌஸி தலைமையில் தெவட்டகஹ பள்ளிவாயலிலும் நடைபெறவுள்ளன.

கிறிஸ்தவ சமய ஆராதனைகள் முன்னாள் பிரதி அமைச்சர் நியோமல் பெரேராவின் தலைமையில் சிலாபம் பெரிய ஆலயத்தில் எதிர்வரும் 03 ஆம் திகதி காலை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜிதவை கைது செய்ய சட்டமா அதிபர் பணிப்புரை

wpengine

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆராயப்படும் – ஜே.வி.பி தெரிவிப்பு

wpengine

Basoorkhan Jp அவர்களுக்கு வாழ் நாள் சமூக சேவைக்கான விருது..!

wpengine