உள்நாட்டு செய்திகள்

இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மஹிந்த மேன்முறையீடு…

தாம் உள்ளிட்ட அமைச்சரவை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார் என  பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட , மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(03) இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிபொருள் நட்டத்திற்கே விநியோகிக்கப்படுகின்றது..!

wpengine

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine

தேநீர் அல்லது உணவுப்பக்கற்றின் விலையை குறைக்க நடவடிக்கை…

wpengine