உலக செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு…

சீனாவின் புஜியான் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டதில் அங்கு பணிபுரிந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், இருவரை உயிருடன் மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்த ஒருவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுரங்க உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

லிபியா நாட்டு இராணுவ அதிகாரிகளின் தலையை துண்டித்து கொலை செய்த ஐஎஸ்

wpengine

இங்கிலாந்தில் 400 ஆண்டு பழமையான ஹோட்டலில் தீ விபத்து

News Editor

கொரோனா உருமாறிக் கொண்டே இருக்கும்

wpengine