உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை பத்திரங்களை ஆய்வு செய்ய விசேட குழு…

அமைச்சர்கள் முன்வைக்கும் அமைச்சரவை பத்திரங்கள், அமைச்சரவையில் கலந்துரையாடப்படுவதற்கு முன்னர் ஆய்வு செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆளும்தரப்பு தலைவர்களால் உருவாக்கப்படவுள்ள குறித்த குழுவில் தலைமை அதிகாரியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்தியவாசிய அமைச்சரவை பத்திரத்தை உடனடியாக அமுல்படுத்துவது மற்றும் ஜனாதிபதியுடன் ஏற்படக்கூடிய மோதல்களை தடுப்பதும் இந்த குழுவை நியமிப்பதற்கான நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிய அமைச்சரவையின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை மறுதினம்(02) காலை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

18 ரயில் சேவைகள் வேலைநிறுத்த போராட்டம்

wpengine

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்

Azeem Kilabdeen