உள்நாட்டு செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக உபாலி மாரசிங்க நியமனம்…

(FASTNEWS-COLOMBO) இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவியிலிருந்து ரமால் சிறிவர்தன இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவர் உபாலி மாரசிங்க இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உபாலி மாரசிங்க இதற்கு முன்னர் கல்வி, சுகாதாரம் மற்றும் பெற்றோலியம் உள்ளிட்ட அமைச்சுக்களில் செயலாளராகவும் தேசிய உற்பத்தி திறன் செயலகத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் சாரதிகள் 21ம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்..

wpengine

முதல் சதத்தை பதிவு செய்தார் அதபத்து

wpengine

இவ்வருடத்தில் தென்னை சார் உற்பத்திகள் ஊடாக 700 மில்லியன் டொலர் இலாபம்..!

wpengine