உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஐ.நா.சுற்றாடல் மாநாட்டில் இன்று(14) விசேட உரை…

(FASTNEWS|COLOMBO) கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யட்டாவின் விசேட அழைப்பின் பேரில் கென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று(14) ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரைநிகழ்த்தவுள்ளார்.

சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும் எனும் தொனிப்பொருளில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்வு நாளை வரை நடைபெறவுள்ளது.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யட்டாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

Related posts

ஈடிஐ – சுவர்மஹல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் நிறுத்தம்

wpengine

நாளை கட்டுப்பணம், வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

wpengine

கல் எளிய பெண்கள் மத்ரஸா – வக்ப் சபை வரலாற்றுத் தீர்ப்பு.

Azeem Kilabdeen