உள்நாட்டு செய்திகள்

இன்றும் பாடசாலைகளில் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி…

(FASTNEWS | COLOMBO) – அரச பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று(13) ஆரம்பமான நிலையில் சகல பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் , இன்றைய தினம் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைந்த அளவிலேயே காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தரம் 6 முதல் 13ம் தரம் வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6ம் திகதி பாடசாலை 2ம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , குறித்த காலப்பகுதியிலும் மாணவர்களின் வருகை குறைந்தளவிலேயே காணப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

C- 350 தொலைபேசி உரையாடல் அடங்கிய பிணை ஆணைக்குழு அறிக்கை வெளியீடு..

wpengine

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

மேதினத்திற்கு 5,532 பஸ்களில் 2,21,000 பேர் கொழும்பு வரவுள்ளதாக NPP தெரிவிப்பு

Azeem Kilabdeen