உள்நாட்டு செய்திகள்

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட தேரர்களுடன் கார்டினால் ரஞ்சித் ஆண்டகை சந்திப்பு

(FASTNEWS | COLOMBO) – கண்டி அஸ்கிரிய பீடம் மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களுக்கும் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(31) இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் அஸ்கிரிய மாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் தலைமையிலான அஸ்கிரிய பீடத்தினர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், மல்வத்து பீடத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் அனுநாயக்கர்களான நியாங்கொட விஜித்தசிறி தேரரும், திம்புல்கும்புரே விமலதம்ம தேரரும் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு…

wpengine

இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் புதல்வரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

wpengine