உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

(FASTNEWS|COLOMBO) – சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதுடன் வடமேல் மாகாணத்திலும் மாத்தறை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

ஓகஸ்ட் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

wpengine

ஹேமசிறி மற்றும் பூஜித் இற்கு பிணை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீள் பரிசீலனை மனு..

wpengine

இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை குறித்து TNA அதிருப்தி.

wpengine