உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று(24) கூடவுள்ளது

(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று(24) காலை 10.30 மணியளவில் ஒன்று கூடவுள்ளது.

இன்றைய தினம் புலனாய்வு பிரிவின் பிரதான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர, பொலிஸ் தீவிரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி வருண ஜயசுந்தர மற்றும் அந்த பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தரங்க பத்திரண ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

இதன்போது சிலரது சாட்சி விசாரணைகளை ஊடகங்களுக்கு அனுமதி வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு

Azeem Kilabdeen

அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

wpengine

ஓய்வூதிய ஒழிப்புக்கு எதிராக அரச அதிகாரிகள் நடவடிக்கை..

wpengine