உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடனான வானிலை

(FASTNEWS|COLOMBO) – வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும் காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

மேல்,தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார்மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல்,மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

மின்சார சபை ஊழியர்களின் பணி நிறுத்த போராட்டத்திற்கு மின் பொறியியலாளர்களும் ஆதரவு..

wpengine

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமனம்

News Editor

விமான சேவைகள் மீளவும் ஆரம்பம்

wpengine