ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தாமரைக் கோபுரம் திங்களன்று மக்கள் உரிமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர கோபுரமான தாமரைக் கோபுரம் எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 05 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

36000 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட காணியில் அமைக்கப்பட்டுள்ள 13 அடுக்குகளைக் கொண்ட இந்த தாமரைக் கோபுரம் 350 மீற்றர் உயரம் கொண்டது.

சீனாவின் எக்னிக் வங்கியின் நிதி உதவியில் 104.3 மில்லியன் டொலர்கள் செலவில் இத் தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோபுரத்தில் தொலைத் தொடர்புகள், நூதனசாலை, உணவுச் சாலை, சுப்பர் மார்க்கட், விற்பனை தொகுதிகள், உணவுத் தொகுதிகள், 400 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம், உல்லாச ஹோட்டல் அறைகள், ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட கேட்போர் கூடம் மற்றும் போல் ரூம் அரங்குடன் பார்வையாளர் கலரி ஆகியவை அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வரவு செலவுத் திட்டம் வரும் வரையில் வாகனம் வாங்க வேண்டாம், வரவு செலவில் வாகன விலை மாறுவது இப்படித்தான்..

wpengine

Google தேடலில் SriLanka முதலிடம்

wpengine

ஹிருனிகா ஏன் இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார் – பத்தரமுள்ளே சீலரத்ன தேரர்

wpengine