Top Story 1உள்நாட்டு செய்திகள்

அரச சொத்துக்களை வீணடித்த யாருக்கும் தமது ஆட்சியில் பதவிகள் இல்லை – சஜித்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச சொத்துக்களை வீணடித்த யாருக்கும் தமது ஆட்சியில் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தியத்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டாவறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், “.. மோசடியில் ஈடுபட்டவர்கள், இலஞ்சம் பெற்றவர்கள், ஊழல் புரிந்தவர்கள் போன்றவர்களை தாம் ஒருபோதும் இணைத்துக் கொள்ளப் போவதில்லை. தற்போது புதிய குழு ஒன்றின் ஊடாகவே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும், இருளில் இருக்கின்ற மக்களுக்கு வெளிச்சத்தைப் போன்று உருவாகவே சஜித் பிரேமதாசவாகிய நான் முயற்சிக்கிறேன்..” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இன்று 18 மணிநேர நீர் விநியோகத் தடை…

wpengine

நாளை(19) எட்டு மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

wpengine

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்!

News Editor