உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை இன்று(29) வழங்கப்பட்டு, அடுத்த வருடத்திற்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி அரசாங்க பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Related posts

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மறுசீரமைப்பு குறித்து ஆராயும் குழுவின் அறிக்கை கையளிப்பு…

wpengine

பம்பலப்பிட்டி, நான்கு மாடிக் கட்டடமொன்றில் தீ விபத்து..

wpengine

எதிர்வரும் 9 மணித்தியாலங்களுள் இடி மின்னலுடன் கூடிய மழை…

wpengine