உள்நாட்டு செய்திகள்

நாளை சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா ) – கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை(07) காலை 9 மணி தொடக்கம் 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களனி ஆற்றின் தெற்கு கரை அபிவிருத்தி செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கட்டுநாயக்க, சீதுவ, ஜா-எல, ஏக்கல, கந்தான, ஆனியாகந்த, துடெல்ல, மா-எலிய, கெரவலப்பிட்டிய, வெலிசர, மாபொல, அல்பிட்டிய, மாபாகே மற்றும் திக்கோவிட்ட உள்ளிட்ட பகுதிகளுக்கே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Related posts

சைட்டத்திற்கு மேலதிகமாக கண்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரி – SB திசாநாயக்க..

wpengine

பந்துல குணவர்தனவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று அழைப்பு..

wpengine

வெடி பொருட்கள் தொடர்பில் எதிர்வரும் 20ம் திகதியின் பின்னர் தொடர்ச்சியாக சோதனை முன்னெடுக்கப்படும்…

wpengine