உள்நாட்டு செய்திகள்

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | பொகவந்தலாவ) – நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ள வேளையில் பொகவந்தலாவ கெம்பியன் தோட்டப் பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சட்டவிரோத மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் 5 சந்தேக நபர்களையும் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

.

Related posts

விடுமுறையினை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவை

wpengine

“அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவிப்பதன் மூலமே உற்பத்தியைப் பெருக்கும் அரசின் திட்டம் வெற்றிபெறும்” – ரிஷாட் எம்.பி..!

wpengine

குரல் மாதிரிகள் ஒத்துப்போனது

wpengine