Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,600 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று(13) காலை 6 மணி முதல் இன்று (14) காலை 6 மணி வரையான 24 மணிநேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 1,600  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, 354 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 26,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரை 6,526 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்குறிப்பிட்டுள்ளது.

மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுமெனவும் பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கரையோர ரயில் சேவை வழமைக்கு..

wpengine

தம்மிக பெரேரா பணிப்பாளர் சபைகளில் இருந்து ராஜினாமா

News Editor

ஞானசார தேரர் தொடர்பில் இன்று ஜனாதிபதியுடன் பௌத்த சமய விவகார அமைச்சர் கலந்துரையாடல்….

wpengine