உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

OICஐ மோதிய சம்பவம் தொடர்பில் மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்ட 05 பேர் கைது…

(FASTNEWS | COLOMBO) பொரளை பொலிஸ் நிலையப் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மீது பம்பலபிடிய பகுதியில் டிபென்டர் வாகனம் ஒன்றினை மோதிச் சென்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இனது புதல்வனான ரணிஷ்க அளுத்கமகே உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடமை நிமித்தம் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தப் போதே இவ்விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(24) அதிகாலை 4.35 மணியளவில் கொழும்பு- காலி பிரதான வீதியின் டுப்ளிகேசன் சந்தியில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் குறித்த டிபென்டர் வாகனமும் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பெற்றோலை பெற முடியாமல் போகலாம்

wpengine

கொச்சிக்கடை தேவாலய தற்கொலைதாரியின் சகோதரன் உட்பட 03 பேர் கைது…

wpengine

மஹிந்த தோற்பார் எனக்கூறிய ஜோதிடர் ரோஹன, ரணில் மற்றும் கோத்தா ஜனாதிபதி ஆவார் என ஆரூடம்.. (VIDEO)

wpengine